தையல் பயிற்சி பயனுள்ளது:- சொல்கிறார் ஆட்சியர்!

தையல் பயிற்சி பயனுள்ளது:- சொல்கிறார் ஆட்சியர்!

கு.அசோக்,

  மகளிர் சுய தொழில் மூலம் வருமான ஈட்ட தையல் பயிற்சி பயனுள்ளதாக உள்ளது -இதனை கிராம மக்கள் பயன்படும் வகையில் குறைந்த செலவில் அவர்களுக்கான ஆடையை தைத்து கொடுக்க வேண்டும்  -  இந்தியன் வங்கி மூலம் சுயவேலைவாய்ப்பு பயிற்சி முடித்த மகளிர்களுக்கு தையல் எந்திரங்கள் சான்றுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.பேச்சு.

 வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள இந்தியன் வங்கியின் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி ஒருமாத காலம் கிராமப்புறங்களை சேர்ந்த 32 பெண்களுக்கு அளிக்கப்பட்டது.

 இதில் அவர்களே சுயமாக தையல் தொழிற் துவங்க தையற் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு வங்கி சார்பில் மாணியத்தில் தையல் எந்திரங்கள் வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

 இதில் முன்னோடி இந்தியன் வங்கி மேலாளர் விஜயகுமரன் மற்றும் ஜமால் மொஹிதீன் மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் ஹரிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 இதில் 32 மகளிர்களுக்கு தையற்பயிற்சி முடித்தற்கான சான்றுகள் மற்றும் தையல் எந்திரங்களை வழங்கி விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மகளிர்கள் சுய வருமானம் அடைந்து பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் இந்த தையற் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

  இதன் மூலம் மகளிராகிய நீங்கள் வருமானம் அடையவும் மேலும் கிராமப்புற மக்களுக்கு மலிவான விலையில் துணிகளை தைத்து கொடுக்கவும் இந்த பயிற்சி உதவும் என்று பேசினார்.