ஒரு மணி நேரம் குப்பைகளை கலைந்த திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆட்சியர்கள்!

கு.அசோக்
மத்திய அரசின் புதிய தூய்மை இந்தியா சுவஜ் பாரத் மிஜன் விழிப்புணர்வு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்
அக்டோபர் 1ம் தேதி நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய தூய்மை இந்தியா (சுவஜ் பாரத் மிஜன் )திட்டத்தின் மூலம் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளபட்டது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை நிலையத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி துவக்கி வைத்ததோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேரில் சென்று அங்குள்ள தூய்மை பணியை தானே மேற்கொண்டு தூய்மை பணி குறித்து தூய்மை பணியாளர்களுடன் ஆட்சியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தூய்மை பணியை துவக்கி வைத்த கலெக்டர்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் குப்பையில்லா இந்தியா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தூய்மை பணியை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், துணை தலைவர் சபியுல்லா மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.