ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் எடப்பாடியாரிடம் கற்று கொள்ள வேண்டுமாம்! சொல்கிறார் முன்னாள் அமைச்சர் வீரமணி!

ஜி.கே.சேகரன்,
ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின், எடப்பாடியாரிடம் கற்று கொள்ள வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வீரமணி பேசியிருக்கிறார்.
திருப்பத்தூர்மாவட்டம், ஜோலார்பேட்டை, அதிமுககிழக்குஒன்றியம்சார்பில்கட்டேரி,அம்மையப்பன்நகர்,பாச்சல்,தாமலேரிமுத்தூர்,ஏலகிரி ,உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை வழங்கினார்.பின்னர் பேசிய அவர்தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பால் விலையை 8 முறை உயர்த்தி உள்ளனர்.மின்சார கட்டணம், டாஸ்மாக் விலை,உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு திமுக ஆட்சியில் விலை உயர்ந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் திமுக எதிர்கட்சியாக இருந்த போது கருப்பு சட்டை அணிந்த விலைவாசியை உயர்த்த கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன் அதிமுக ஆட்சி பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என சட்டைப்பையில் அட்டகாசம் செய்தனர்.
ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளாதால் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினமா செய்ய விட்டு பதவி விலக வேண்டும் எனவும்
ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் எடப்பாடியாரிடம் கற்று கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.