பெண் நிருபர் மீது கோபத்தை செலுத்திய அண்ணாமலை! வறுத்தெடுத்த சக செய்தியாளர்கள்!

ஜெ.அருண்,
பெண் நிருபர் மீது தனது கோபத்தை செலுத்தியிருக்கிறார் அண்ணாமலை. தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த
பெண் நிருபர் ஒருவர் அண்ணாமலை அளித்த பேட்டியின் போது நறுக்கென்று ஒரு கேள்விகேட்டார். அதாவது பாஜக தலைவர் பதவி போய்விட்டால் அடுத்து என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.
இந்த கேள்வியால் கொஞ்சம் திணறிய அண்ணாமலை உச்சக்கட்ட கோபமானார். அப்போது அந்தப் பெண் நிருபரிடம் அண்ணாமலைரொரு மாதிரியாக அவரது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனைக்கண்ட மற்ற பத்திரிகையாளர்கள் ஆவேசம் அடைந்துடன் அண்ணாமலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதயாத்திரை சென்று கொண்டிருந்த அண்ணாமலை, டெல்லிக்கு அழைக்கப்பட்டார். ஆகவே அவர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது கோவை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை, "விளக்கம் கேட்க பாஜக ஒன்றும் கம்பேனி கிடையாது. தமிழக பாஜக எப்படி இயங்குகிறது என்பது பற்றி சொல்வதற்காக தான் டெல்லி செல்கிறேன். தலைவர் பதவி என்பது வெங்காயம் மாதிரி. அதை உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. பதவியை நம்பி அரசியலுக்கு நான் வரவில்லை. ஒரு அதிகாரமிக்க பதவியை தூக்கியெறிந்துவிட்டு வந்தவன்" எனக் கூறினார்.
அப்போது அங்கிருந்த பெண் நிருபர், "பாஜக தலைவர் பதவியில் இருந்து உங்களை நீக்கிவிட்டால் நீங்கள் கட்சியில் இருப்பீர்களா?" எனக் கேட்டார் இந்தக் கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை, "நீங்க இங்க வாங்க சிஸ்டர். இப்படி அறிவாளித்தனமான கேள்வியை கேட்ட உங்கள் முகத்தை தமிழக மக்கள் பார்க்கட்டும். இங்க வாங்க. இப்படி ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டவரை 8 கோடி பேர் பார்க்கணும். நான் சொல்றதுல என்ன தவறு இருக்கு? எனக் கூறினார்.
அதை பார்த்த சக நிருபர்கள் அண்ணாமலையிடம், "சார் கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு நிருபரிடம் இப்படியெல்லாம் நீங்கள் பேசுவது சரியல்ல" என்றனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கு. அந்த மரபை தாண்டிட்டீங்கனா யாராக இருந்தாலும் அண்ணாமலை விட மாட்டான். இந்தக் கேள்வியை எப்படி நீங்க நியாயப்படுத்துவீங்க? நான் இன்றும் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் சீட்டில் நான் பசை போட்டா உட்கார்ந்திருக்கிறேன். விவசாயம் என்பதுதான் எனது முதல் அடையாளம். அதற்கு பிறகுதான் அரசியல்வாதி என்கிற அடையாளம்.
கேள்வி கேக்குறதுக்கு ஒரு மரபு இருக்கு சிஸ்டர். ஏன்னா நீங்க எல்லாம் பெரிய ஆளாக வரணும்னு நினைக்கிறவன் நான். இப்போ இந்த சேனல். நாளைக்கு அந்த சேனல். 40 வயசுக்கு அப்புறம் எங்கேயும் இல்லைனு ஆகிவிடக் கூடாது. நீங்க டெல்லி வரைக்கு போகணும். தேசிய ஊடகங்களில் ஒரு எடிட்டராக அமர வேண்டும். அதற்கு, கேள்வி கேட்கும் பக்குவமும், ஒரு ஷார்ப்னெஸ்ஸும் இருக்கணும்" என உளறிக் கொட்டினார்.