ஐ.பி.எஸ். அலுவலர் காங்கிரஸில் இணைவதற்காக ராஜினாமாவா?

ஜி.சாந்தகுமார்,
காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காகவே தமிழக மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியான பி.கே. ரவி, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று பரவலாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அண்ணாமலை, சசிகாந்த் செந்தில் ஆகியோரைப்போலவே இவரும் ராஜினாமா செய்திருக்கிறார்.
1989-ம் ஆண்டு தமிழக பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான பி.கே. ரவி, கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறை பணியில் நேர்மையானவராவார்¢ பி.கே. ரவி. தமிழக டிஜிபி பதவிக்கான போட்டியில் இரண்டாம் இடத்தில் இவர் இருந்தவர்.
அவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தனது சொந்த மாநிலமான பீகாரில் பி.கே. ரவி களமிறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.