சீர்திருத்த கருத்துக்களை உடையவர் கமல்ஹாசன்! சொல்கிறார் கே.எஸ்.அழகிரி!

சீர்திருத்த கருத்துக்களை உடையவர் கமல்ஹாசன்! சொல்கிறார் கே.எஸ்.அழகிரி!

 ஜி.கே.சேகரன், 

 வேலூரில்  பேரா வாலிபால் போட்டிகளை காங்கிரஸ் தலைவர் அழகிரி துவங்கி வைத்தார்  - தமிழக ஆளுநர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் குறித்து கருத்து கூறியது அவருக்கு தமிழக கலாச்சாரம் புரியவில்லை காங்கிரஸ் தலைவர் அழகிரி வேலூரில் பேட்டி

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாநகராட்சி உள் அரங்கில் மாற்றுத்திறனாளர்களுக்கான மாநில அளவிலான அமர்வு கையுந்து பந்து போட்டி துவங்கியது.

   இதில் கிலாடி,ராஜன்,ராஜேஷ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தலைமையில் இப்போட்டியினை காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் அழகிரி துவங்கி வைத்தார்.

   தமிழகம் முழுவதுமிருந்து 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர், இதில் ஆண்கள் அணி பெண்கள் அணி என இருபிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது.

 இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும் தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் நடக்கும் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

 பின்னர் காங்கிரஸ் தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாடு என சொல்ல கூடாது தமிழகம் என சொல்ல சொல்கிறார் ஆளுநர்.

 தமிழ்நாடு என்பது தான் மரபு ஆனால் தமிழ்நாடு என்பது நம்முடைய நாடு இதுபோன்று பல நாடுகள் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்டவைகளும் நாடுகள் தான்.

 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைந்தது தான் இந்தியா.

 இந்தியா என்பது நாடல்ல தேசம் பஞ்சாப் உடை தமிழ்நாட்டிற்கு இணக்கமாக வராது ஆனால் பஞ்சாபியர்களும் இந்தியர்கள் தமிழர்களும் இந்தியர்கள்.

  இவைகள் எல்லாம் ஆளுநருக்கு தெரிய வேண்டும்.

  இந்த விஷயத்தை சொல்ல தான் ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 பாஜகவினர் இந்துக்கள் பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து கூறுவதில்லை என்று கூறுகிறார் ஆனால் முதல்வர் பொங்கலுக்கு வாழ்த்து கூறுகிறார்.

  அது இந்து கலாச்சார விழா தான் நாம் தான் இந்து மதம் ஆனால் பாஜகவினர் எதற்காக இந்து பண்டிகைகளை முதல்வர் புறக்கணிக்கிறார் என்று சொல்கிறார்.

  பாஜக தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுகொள்ளவில்லை.

 கமலஹாசன் ராகுல் காந்தி சந்திப்பு வரவேற்புடையது நல்ல மனிதர் சீர்திருத்த கருத்துக்களை உடையவர் கமல்ஹாசன் எனவே ராகுல் காந்தி கமல்ஹாசன் சந்திப்பை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம் என்றார்.