பசு மாட்டினை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மக்கள் பாராட்டு!

கு.அசோக்,
வாலாஜாபேட்டை அருகே திறந்தவெளியில் இருந்த ஆழமான கான்கிரீட் தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக பசுமாடு ஒன்று விழுந்தது. னின்னர் மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, சோளிங்கர் செல்லும் சாலையில் அருகே தனியார் நபருக்கு சொந்தமான வீட்டின் இடிக்கப்பட்டுள்ள காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் திறந்தவெளியில் சுமார் 6 அடி ஆழமுள்ள சம்பு தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக கன்று குட்டி பசு மாடு ஒன்று தொட்டியில் விழுந்து தண்ணீர் தொட்டியில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதனை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பலர் சம்பு கான்கிரீட் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்த கன்று குட்டி பசு மாட்டினை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பிறகு தகவல் பெற்று துரிதமாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி பின்னர் ஜேசிபி வாகன இயந்திர உதவியுடன் சம்பு கான்கிரீட் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்த பசு மாட்டினை தொட்டியை உடைத்து உயிருடன் மீட்டனர்.
மேலும் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் வெளியே வந்த பசுமாடு நல்லமுறையில் சாலையில் நடந்து சென்றது இதனை தொடர்ந்து அந்த இடத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் பசு மாட்டினை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை வெகுவாக பாராட்டினர்.