ஊர்ல யார் இறந்தாலும் ஒரே ஒரு மாலைதான் போடனும்! சூப்பர் தீர்மானம்!!

வே.இளங்கோவன்,
இறந்தவர்களுக்கு மலரஞ்சலி தான் கடைசியாக செலுத்தப்படும் மரியாதையாகும்.
அதை சாக்காக வைத்துக்கொண்டு சவத்தை பார்க்க வரும் உறவுகள் நட்புகள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துவரும் மாலைகளே இதற்கு காரணம்.
இப்படி கொண்டுவரப்படும் மாலைகளில் உள்ள பூக்களை சவ ஊர்வலத்தின் போது பிய்த்து கீழே வீசிக்கொண்டே செல்கின்றனர்.
இதனால் பல வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.
, இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று உத்தேசித்த ஒரு கிரமத்தினர் புதுமையான கட்டுபாடை விதித்து அதை அமல்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த வகையில் நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி என்ற கிராமத்தில் உள்ள சாந்தான் வெளி, அகரம் என்ற 2 குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களுக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஒருலதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி கிராம மக்கள் சார்பில் ஒரே ஒரு மாலையை மட்டும் இறந்தவர்களுக்கு அணிவித்து இறுதி சடங்குகள் செய்வது என்றும், இறப்பு செய்தி அறிவிக்கும்போது மாலை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும், 'ஒரே ஒரு மாலை போதும்' என்ற அறிவிப்பை கிராம மக்கள் சார்பில் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பது என முடிவெடுத்துள்ளார்கள்.
இந்த புதுமையான நடைமுறையால் இறுதி ஊர்வலத்தின்போது அந்த மாலைகளை பிய்த்து சாலை நெடுகிலும் வீசப்படும் பழக்கம் முடிவுக்கு வரும். விபத்துகளும் ஏற்படாது.
ஆயக்காரன்புலம் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு தொடர்பான தகவல்களை அறிந்த பலரும் இதைபாராட்டுகின்றனர்.
மேலும் மாலைக்கு பதில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.200 வழங்கிடவும், அந்த தொகையில் இறுதி சடங்கு நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இறுதி சடங்கிற்கு லட்சக்கணக்கில் செலவு செய்வது தவிர்க்கப்பட்டு ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை ஏற்படும் என கிராம மக்கள் சொல்கிறார்கள். மேலும் இறுதி சடங்கின்போது வசூல் செய்யப்படும் பணத்தை வசதி படைத்தோர் வேண்டாம் என்று கருதினால், அந்த பணத்தை ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து ஏழ்மையான குடும்பத்தில் நிகழும் இறப்புக்கு செலவு செய்யலாம் என்ற முடிவையும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.