திருவாரூர் சென்ற அரக்கோணம் மீட்பு குழு! பள்ளிகளுக்கு விடுப்பு அளித்த ஆட்சியர்!

க.பாலகுரு, 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.

   வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவாகி உள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வலுப்பெற்று புயலாக மாற உள்ளது.

 அந்த புயலுக்கு மாண்டஸ்  பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

 அந்த வகையில்  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதிக்கு  அரக்கோணம் பகுதியிலிருந்து கமாண்டெண்ட் அருண்தேவ்காம் தலைமையில்  25 பேர் கொண்ட  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.

   இந்நிலையில் பாதுகாப்பு கருதி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திருமது ப.காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப.அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.