ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தேர்வுக்கு தயாராகுங்கள்! முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு சிறப்புரை.!

பா.சுரேஷ்,
எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் வி.இறையன்பு பங்கேற்று 864 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி பட்டம் பெற்ற மாணவ, மாணவியரை வாழ்த்தி பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆ£.¢எம். கலை அறிவியல் கல்லூரி, வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை மூலமாக கல்விக் குழுமங்களின் நிறுவனரும்,கல்வியாளரும்,பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்களால் 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இக் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வளாகத்தில் அமைந்துள்ள டி.பி. கணேசன் கலையரங்கில்நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். வாசுதேவராஜ் வரவேற்று, கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்து பேசினார்.
அதில், சென்னை பல்கலைக்கழத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி நாக் அமைப்பின் எ+ அங்கீகார தரச் சான்று மற்றும் ஐ.எஸ்.ஓ 9001:2015 சான்று பெற்ற கல்லூரியாகும் என்றார்.கற்றல், கற்பித்தலில் முன்னேறிய தொழில்நுட்பங்களை கொண்டு மாணவர்கள் எளிதாக கல்வி பயிலவும், அதில் வெற்றி பெறவும் கற்பித்தல் முறை கடைபிடிக்கப்படுகிறது.
2991மாணவ, மாணவியர்,155ஆசிரியர்கள் மற்றும் 73 ஊழியர்களை கொண்ட இக் கல்லூரியில் 15 இளங்கலை பட்ட படிப்பும்,9 முதுகலை பட்ட படிப்பும் உள்ளது. ஏப்ரல் 2022 பல்கலைக்கழக தேர்வில் இக்கல்லூரி மாணவர் 3 பேர் முதுகலை பட்ட தேர்விலும்,இளங்கலை பட்ட தேர்வில் 1 மாணவரும் தங்க பதக்கம் பெற்றுள்ளனர்.இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் ஆராய்ச்சி பட்டம்(பி.எச்டி) பெறுவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது என்றார்.
மேலும் ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இக்கல்லூரி பல்வேறு ஆராய்ச்சி ஆய்வு அறிக்கைகளை ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட்டுள்ளதுடன் சில காப்புரிமை பெற பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் தரமான கல்வி வழங்குவதுடன் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு வளாக வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுதரும் பணியை சிறப்பாக செய்து வருகிறது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, எச்சீஎல், டாடா மற்றும் டெல்லோட்டி, ப்ரோடாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி தலைமை வகித்து பட்டம் பெற்றவர்களை வாழ்த்தி பேசுகையில் :
இந்த நாள் வாழ்க்கையில் உங்களுக்கு முக்கியமான நாள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு உங்களை கொண்டு செல்லும் நாளாகும். பட்டம் பெற்று செல்லும் உங்களுக்கு சமுதாயத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி வரும். வேலை வாய்ப்பு சம்மந்தமாக கார்ப்பரேட் நிறுவன பணிகளில் உங்களுக்கு பெரும் சவால்கள் இருக்கும், அவற்றை கவனமாக நீங்கள் எதிர்கொண்டு அதில் வெற்றி காணவேண்டும்.வாழ்க்கையில் நீங்கள் முன்னேற உங்களுக்கு முதலீடு செய்தவர்கள் உங்களது பெற்றோர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உங்களது அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார்.
விழாவில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் வெ.இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று 864 மாணவ, மாணவியற்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில் :
இந்த நாள் வருங்காலத்தில் உங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நாள், நீங்கள் கற்ற கல்விக்கு அங்கீகாரம் அளிக்கும் நாளாகும். சமுதாயத்தில் மக்களின் எதிர்பார்ப்பு என்பது அளவில்லாதது, அதை நிவர்த்தி செய்வதற்கு நீங்கள் பெற்ற கல்வி உதவியாக இருக்கும். உங்களது அறிவு, திறமையை வெளிப்படுத்தும் நேரமிது, ஐஏஎஸ், ஐபிஎஸ், போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ள்வேண்டும்.உங்களின் உண்மையான வாழ்க்கையில் பல்வேறு கேள்விகள் உங்களை ஆட்படுத்தும், அதை எதிர்கொண்டு அதற்கு முடிவுகான உங்களை தயார்படுத்தி கொள்ளவேண்டும்.வாழ்க்கையில் குறிக்கோள் என்பது மிக முக்கியம் அந்த குறிக்கோளை நோக்கி சென்றால் நீங்கள் நல்ல நிர்வாகிகளாக, தொழில் வல்லுநர்களாக உயரமுடியும்.
உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை, அதற்கு உங்கள் அறிவிணை, எண்ணங்களை வெற்றிக்கான வழிகளில் செலுத்தவேண்டும் என்றார்.
விழாவில் கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் எஸ். ராமசந்திரன்,எஸ்ஆர்எம் துணைப்பாதிவாளர் முனைவர் அந்தோணி அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் கல்லூரி துணைமுதல்வர் பேராசிரியர் கே.மதியழகன் நன்றி கூறினார்.