கோட்டையில் கொடியேற்றிய வேலூர் கலெக்டர்!

ஜி.குலசேகரன்,
வேலூரில் நலத்திட்டங்களை வழங்கி இந்திய தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் ஏற்றி வைத்தா£.¢ வேலூர்மாவட்டம், வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார் பின்னர் தியாகிகளின் வாரிசுகளை கௌரவித்தார் அரசின் சார்பில் ரூ.98 லட்சம் மதிப்பில்பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் நெ.கண்காணிப்பாளர் மணிவண்ணன், இ.கா.ப. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பதக்கங்களும் சான்றுகளும் வழங்கப்பட்டன பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது, இதில்திரளானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வேலூர் கோட்டையின் மேல் உள்ள கொடி மரத்தில் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திரத்திற்கு வித்திட்ட கோட்டையில் தான் முதன் முதலில் சிப்பாய் புரட்சி நடந்தது அந்த இடத்தில் ஆட்சியர் கொடி ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் நேதாஜி மைதானத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய
கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வெண் புறாக்களை பறக்கவிட்டார்.