பாடம் நடத்திய ஆட்சியர்!

த.நெல்சன்,
வேலூர் மாவட்டம் கோடையடி குப்புசாமி முதலியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒரு வகுப்பறைக்குள் சென்ற அவர் மாணாக்களுக்கு பாடம் நடத்தினார்.
ஆசியர்களை சந்தித்து சில வழிகாட்டுதல்களை சொன்னார்.
அதே போல் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேலும் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. அங்குலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.பேபி ஒன்றிய குழு துணை தலைவர் திரு.சரவணன் உட்பட பலர் உள்ளனர்.