தோல் கழிவு இராசாயன நீரை கிணற்றில் கலந்த பாதக தொழிற்சாலைகள்! ஆட்சியர் சீல்!!

தோல் கழிவு இராசாயன நீரை கிணற்றில் கலந்த பாதக தொழிற்சாலைகள்! ஆட்சியர் சீல்!!

ம.பா.கெஜராஜ்,

 கழிவு நீரினை கிணறு மற்றும் நிலத்தின் மேல் வெளியேற்றிய 2 தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டித்து மூடுதல் உத்திரவு -  மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் நடவடிக்கை.

  வாணியம்பாடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வின் போது வளையாம்பட்டு கிராமம், வாணியம்பாடி வட்டத்திலுள்ள தி/ள்.சர்பிராஷ் நியாஷ் அண்டு கம்பெனி தொழிற்சாலை ஆனது கழிவு நீரினை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திரிப்பு செய்யாமல் கிணற்றுக்கு வெளியேற்றி வருவது அறியப்பட்டது.  எனவே, அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவியது.  மேலும், அத்தொழிற்சாலையானது அபாயகரமான பொருட்களை கையாளுவதற்குரிய உரிமம் பெறப்படவில்லை. 

   மேலும், வாணியம்பாடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வின் போது வளையாம்பட்டு கிராமம், வாணியம்பாடி வட்டத்திலுள்ள தி/ள்.வி.ஷ்ரீனிவாஸ் அண்டு கோ தொழிற்சாலை ஆனது கழிவு நீரினை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திரிப்பு செய்யாமல் நிலத்தின் மேல் வெளியேற்றி வருவது அறியப்பட்டது.  எனவே, அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவியது.  மேலும், அத்தொழிற்சாலையானது அபாயகரமான பொருட்களை கையாளுவதற்குரிய உரிமம் பெறப்படவில்லை.

          மேலும், அதன் காரணமாக இந்த இரண்டு தொழிற்சாலைகளுக்கு மூடுதல் உத்திரவு மற்றும் மின் இணைப்பு துண்டிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு. வெ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.  அவரின் பரிந்துரை ஏற்று மாவட்ட ஆட்சியர், மின் இணைப்பினை துண்டிக்க உத்திரவிட்டார். எனவே தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இயக்கம் நிறுத்தப்பட்டது.

  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரினையோ அல்லது திடக்கழிவுகளை நிலத்தின் மேல், கிணற்றில் அல்லது நீர் நிலைகளில் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்திரவு அளிக்கப்படும் என்றும், மேலும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்தவிதமான அன்றாட உபயோக கழிவு நீரை ஆற்றிலோ / கழிவுநீர் வாய்க்காலிலோ வெளியேற்றம் செய்யக்கூடாது என்றும் அதற்கு அமைப்பு எதுவும் இருந்தால் அவைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். 

  மேலும், பொது மக்கள் தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீர் வெளியேற்றுவதை கண்டறிந்தால் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், கைபேசி எண்: 8056042227 மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர், கைபேசி எண்: 8056046133 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.,,,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.