ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவனின் உறவினர்கள்!

தி.விநோத்குமார்,
சேட்டை பண்ணின மாணவனை ஆசிரியர் கண்டிக்க போய் செருப்படி வாங்கிக்கொண்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
திருவள்ளூர் மாவட்டம், குருவராஜகண்டிகை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுரேஷ் பாபு - செவ்வந்தி தம்பதியரின் மகனான ஹரிஹரன் (12), ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று மதியம் வகுப்பறையில் ஹரிகரன் படிக்காமல் சக மாணவர்களுடன் சேட்டை செய்துக்கொண்டிருந்தானாம்.
அதனை அப்பள்ளியில் தற்காலிக ஆசிரியாக பணிபுரியும் மோகன் பாபு, கண்டித்துள்ளார். மேலும், பிரம்பாலும் மாணவன் ஹரிஹரனை அவர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹரிஹரனுக்கு கை, கால்களில் பிரம்பு பட்டதால் லேசாக வீங்கியிருந்தன.
ஹரிஹரன் தனது பெற்றோரிடம் ஆசிரியர் தன்னை அடித்ததை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவனின் பெற்றோர்கள், உறவினர் ¢நேற்று காலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அப்போது ஆசிரியர் மோகன் பாபுவை விசாரிப்பதற்காக தலைமை ஆசிரியர் அழைத்துள்ளார். இதன்பேரில், அங்கு வந்த மோகன் பாபு, நடந்ததை கூறினார்.
அப்போது திடீரென ஆவேசமான மாணவனின் உறவினர்கள், ஆசிரியர் மோகன் பாபுவை தாக்கினர். இதை எதிர்பார்க்காத மோகன் பாபு அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவரை ரவுண்டு கட்டிய உறவினர்கள் செருப்பாலும், கட்டை, கல்லாலும் அடித்தனர். இதனால் ஆசிரியரின் முகத்தில் இருந்து ரத்தம் வந்தது. இருந்தாலும், விடாமல் ஆசிரியரை ஒரு காட்டு காட்டினர்.
உடனடியாக போலிசுக்கு போன் செய்தவுடன், போலீஸார் அங்கு வந்து அவர்களிடம் இருந்து ஆசிரியரை மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள், ஆசிரியரை பணிநீக்கம் செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
பாவம் வாத்தியார்.