வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்! பூங்காவை திறந்து வைத்த ஆட்சியர்!

த.நெல்சன்,
வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஏ. பி. நந்தகுமார், திரு. ப. கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் திரு. பி. ரத்தினசாமி, இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பூங்காவை திறந்துவைத்த ஆட்சியர் & எம்.எல்.ஏ.!
மேலும் வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் 15 வது நிதி குழு மான்ய திட்டத்தில் ரூ.12.49 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.5 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்களும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, வேலூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பாபு, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. வின்சென்ட் ரமேஷ்பாபு, திரு.ராஜன்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.