வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு!

கு.அசோக்,
மாதனூர் ஆலங்காயம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இ.கா.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 13 மாவட்ட கவுன்சிலர் 21 ஒன்றிய கவுன்சிலர் 208 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 1779 வார்டு கவுன்சிலர்கள் என 2021 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,மாவட்டம் முழுவதும் 1264 வாக்குச்சாவடி மையங்களில் 9383 தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
இந்நிலையில்,வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தையும், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓரியண்டல் உருது மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாழ்க்கை என்னும் மையத்தையும் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் திருவள்ளூர் மாவட்ட தகவல் மைய அலுவலர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.