குறட்டை விடும் அரசு அலுவலர்கள்! பரிகாரம் செய்த சமூக சேவகர்!! மக்கள் பாராட்டு!!
ஜி.கே.சேகரன்!
ஜோலார்பேட்டை அருகே பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை சரி செய்ய பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் சமூக சேவகர் ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் சரி செய்து கொடுத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் பஞ்சாயத்து ஜெய்பீம் நகர் குருமன்ஸ் காலனி உள்ளிட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதிகளில் உள்ள 2 ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து பல நாட்களாக பயன்படுத்த முடியாமல் போயின.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக சேவகர் தேவன் மற்றும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் அதிகாரிகளிடம் மனு கொடுத்து ஓய்ந்து போன தன்னுடைய சொந்த செலவில் ஆழ்துளை கிணறுகளை சரி செய்து கொடுத்துள்ளதுள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் இதைப் போலவே பல முறை பல்வேறு பொது பிரச்னைகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கைவிடும் நிலையில் தானே முன்னின்று சமூக சேவை செய்வதில் சமூக ஆர்வலர் தேவன் முதல் ஆளாக வந்து நிற்பார் என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.