செத்து போனவர்களை பேப்பர் திருத்த அழைப்பதா? திருவள்ளுவர் பல்கலை முன் பறை இசைத்து ஆர்பாட்டாம்!

ஜி.கே.சேகரன்,
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக தொழிலாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பறை அடித்து ஆர்பாட்டம் - முறைகேடுகள் எதுவுமில்லை என துணை வேந்தர் ஆறுமுகம் பேட்டி - முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாக முன்னாள் பேராசிரியர் இளங்கோ குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம், காட்பாடி, சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுபாட்டில் வேலூ£,¢ ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகிறது.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்களுக்கு முன்னேற்றத்தில் ஆர்வமில்லாமல் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இதில் பல்வேறுமுறைகேடுகளும் குளறுபடிகளும் உள்ளன. இதில் ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்களை 2013 ஆம் ஆண்டு 66 பணியாளர்களை பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்தது. இதுகுறித்து பல மனுக்கள் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து நீதிமன்றங்கள் இவர்களுக்கு பணி வழங்கவும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டும் இதுவரையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.
66 தொழிலாளர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமையில் உள்ளது எனவே அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட நாளில் இருந்து லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் இப்பல்கலைக்கழகம் சிக்கியுள்ளதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்..
மேலும் இதற்கென அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
இந்த பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடும் போது தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் கொடுப்பது? தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகளை நிறுத்தி வைப்பது?! இறந்த போன பேராசிரியர்களை விடைத்தாள் திருத்த அழைத்தது போன்ற பல்வேறு முறைகேடுகள் குளறுபடிகளில் சிக்கியுள்ளது.
ஆகவே லஞ்ச முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என கோரி திருவள்ளூவர் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் கௌரவத்தலைவரும் முன்னாள் ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அப்போது பறை இசை வாசித்து ஆர்பாட்டம் செய்தனர்
இதுகுறித்து பேராசிரியர் இளங்கோ கூறுகையில் நீதிமன்றம் கூறியும் 66 தொழிலாளர்களுக்கு பணி வழங்கபடவில்லை மேலும் இப்பல்கலைக்கழகத்தில் பல முறைகேடுகளும் நடக்கிறது தேர்வு முடிவுகளில் குளறுபடி கையூட்டு பெற்று கொண்டு மாணவர்களை பாஸ் செய்வது போன்றவைகள் நடப்பதாக வழக்கம் போலவே சொன்னார்.
இதுகுறித்து திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் அம்பேத்கர் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிதி அளித்தவுடன் அம்பேத்கர் இருக்கை அமைக்கபடும் மேலும் சில மதிப்பெண்கள் பிரச்சணை உள்ளது அதனை கல்வித்துறைக்கு அனுப்பி சரி செய்யவுள்ளோம்.
மூன்றாமாண்டு மாணவர்கள் முடிவுகளை முன் கூட்டியே வெளியிட்டுள்ளோம், சில மாணவர்கள் தேர்வு எண் சரியாக எழுதாதால் அவர்களின் முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளோம். கடந்த 10 மாதங்களில் எந்த தவறும் நடக்கவில்லை, மேலும் வெளியாட்கள் யாரையும் நாங்கள் பணிக்கு அமர்த்தவில்லை.
இங்குள்ள பல்கலைக்கழக பணியாளர்கள் மட்டும் பணி செய்கின்றனர் தேர்வு விடைதாள்கள் திருத்த பல்கலைக்கழக பேராசிரியர்களை மட்டுமே பயன்படுத்துகிறோம் என கூறினார்.