விவசாயிகளை பிடித்து வழக்குபோடுவேன் என மிரட்ட கூடாது! ஆட்சியர் கூட்டத்தில் கோரிக்கை!

விவசாயிகளை பிடித்து வழக்குபோடுவேன் என மிரட்ட கூடாது! ஆட்சியர் கூட்டத்தில் கோரிக்கை!

 கு.அசோக்,

 ஆறுகளில் தோல் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்கபட வேண்டிய கரும்பு அரவை நிலுவை தொகையை பெற்று தர வேண்டும் - காவல்துறையினர் விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளை பிடித்து வழக்குபோடுவேன் என மிரட்ட கூடாது என வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டமானது நடந்தது.

   இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ஆறுகளிலும், ஆறுகளின் கால்வாய்களிலும் தோல் மற்றும் வஜ்ஜிரம் தொழிற்சாலை கழிவுகள் கலக்கபடுகிறது.

  அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளின் கரும்பு அரவை நிலுவை தொகையை உடனே பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மலை பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு வருகின்றனர் அதனை தடுத்து பொய் வழக்கு போடுவதாக காவல்துறையினர் மிரட்டுகின்றனர்.

 இனி வரும் காலங்களில் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மடக்கி காவல்துறையினர் மிரட்டல் விடுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.