ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமாரின் சுறு சுறு பணி!

ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமாரின் சுறு சுறு பணி!

 ஜி.கே.சேகரன்,

  சோளிங்கர் அருகே 6 கிராமங்களுக்கு செல்ல கூடிய சாலை நீரில் அடித்து செல்லப்பட்டதால் கிராம மக்கள் பாதிப்பு.  சோளிங்கர் சேர்மன் அந்த பகுதியில் தற்போது மணல் மூட்டைகளை கொண்டு சாலையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியிலிருந்து தலைவாய் பட்டடை செல்லக்கூடிய கிராமத்திற்கு செல்ல சாலை ஓரத்தில் 100அடி தடுப்பணை கால்வாயில் அதிகளவில் நீர் சென்றதன் காரணமாக வெள்ளிமேடு, தளவாய்பட்டடை,கேசவனாகுப்பம், எஸ் ஆர் கண்டிகை,புதூர்,மருதாலம்கூட்டுசாலை உள்ளிட்ட ஆறு கிராமங்களை இணைக்கக்கூடிய தார்சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

 இதனால்  சுமார் 8 அடி அளவிற்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.இது குறித்து தற்போது புதிதாக பொறுப்பேற்ற சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர்  கலைக்குமார் அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

  புகாரை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சாலையை பலப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

  இதனை தொடர்ந்து தற்போது 100 நாட்கள் பணியாரைக்களைக் கொண்டு  மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஒரிரு நாட்களில் மணல் மூட்டைகளை கொண்டு சாலையை பலப்படுத்தும் பணியில் நடைப்பெறும் தெரிவித்தனர்.

 அப்போது  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தகுமார், கொடைக்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், துணைத்தலைவர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 மகேந்திரவாடி ஏரிடைப்பு!

  அதே போல், பாணாவரம் அருகே மகேந்திரவாடி ஏரியில் உடைந்த நாட்டு மதகு சீரமைக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் ஏரிகளை முறையாக பராமரிப்பு செய்யவேண்டும் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

  இராணிப்பேட்டை மாவட்டம் ,பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி ஏரி தற்போது நிரம்பி கடை வாசல் செல்கிறது இந்த ஏரிகரை மையப்பகுதில் நாட்டு மதகிற்கும்  கரையின் உள் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதாக  மாடுமேய்ப்பவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மதகு பகுதியை தற்காலிகமாக சீர் அமைத்த போதும்  மீண்டும் தண்ணீர் கசிவை சீர் செய்தனர்.

  கரையின் பலவீணம் கருதி அவசரகலத்திற்க்கு  பயண்படுத்தப்படும் பெரிச்சாலிமதகு மற்றும் வெட்டு மதகுகளை திறந்து விட்டனர்.

 இதனால்  பத்தாண்டுக்கு பிறகு ஏரி நிரம்பியும் தண்ணீரை சேமிக்க முடியாமல் இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  பொதுப்பணித்துறை அலுவலர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் ஏரிகளை கரைபலப்படுத்துதல் ,மதகுகளை பழுபார்த்து சீர் அமைத்தல் ஏரியை ஆழப்பபடுத்ததாது நீர்வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிப்பு செய்யாதது தான் இதற்கு காரணம் என்று விவசாயிகள் பொதுமக்கள் தரிவிக்கின்றனர்.

 இனி வரும் காலங்களில் நீர் மேலாண்மை திட்டம் முறையாக செயல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.