மினி மாரத்தன்! ஏ.எஸ்.பி.பங்கேற்பு!

கு.அசோக்,
நெமிலி அருகே திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி பகுதியில் நேரு யுகேந்திரா சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் அரக்கோணம் காவல் துணை மாவட்ட கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் அசோக் மற்றும் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் ஆகியோர் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தது மட்டுமல்லாமல் மினி மாரத்தானில் பங்கேற்றார்.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை கலந்துகொண்டு பங்கேற்றனர்.இதில் முதலாவது மற்றும் இரண்டாவதாக வெற்றி பெற்றதற்கு விலை உயர்ந்த மிதிவண்டியும் மாரத்தான் கலந்து கொண்டு பெண் முதல் வெற்றியாளருக்கு மிதிவண்டியும் வழங்கப்பட்டது.