ஏரி நீர் வரத்தால் மாடிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

கு.அசோக்,
சதுப்பேரி ஏரி நிரம்பியது ஏரி நிரம்பிய தண்ணீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மூன்று நாட்களாக மக்கள் அவதி வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் மக்கள் தவிப்பு - மேலும் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
வேலூர் மாவட்டம்,வேலூர் அருகேயுள்ளது சதுப்பேரி என்கிற பெரிய ஏரி. பாலாற்றிலிருந்து வெள்ள நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஏரிக்கு திருப்பிவிடப்பட்ட நிலையில் ஏரி முழுமையாக நிரம்பி கடைவாசல் கோடி செல்கிறது. கால்வாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் சரியாக பராமரிக்கப்படாததால் வெளியேறும் நீரானது கொணவட்டம் பகுதியில் ரோஜா மசூதி பகுதியில் உள்ள ரகீம் சாயிப் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் மூன்று நாட்களாக மக்கள் வெளியேற வர முடியாமல் மாடிகளில் தங்கி தஞ்சமடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி அதிகாரிகளும் இவர்களுக்கு எந்த மீட்பு நடவடிக்கையும் எடுக்காமல் உணவு கூட வழங்காமல் அலைகழித்து வருகின்றனர்.
உடனடியாக மீட்டு திருமண மண்டபங்களிலோ அல்லது பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உணவு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் கோருகின்றனர்.
தீபாவளி கூட கொண்டாட முடியாமல் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீரால் மக்கள் அவதியுற்று வருகின்றனர் ஆகவே அதிகாரிகள் மீட்பு நடவடிக்கை எடுக்க கோருகின்றனர்
சதுப்பேரி ஏரி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5.