கொட நாட்டில இருந்து வேறு விஷயங்கள் வெளியில வரப்போகுது!கி.வீரமணி சூசக பேட்டி!


ம.பா.கெஜராஜ், 
  கொட நாட்டில் இருந்து வேறு விஷயங்கள் வெளியில வரப்போகுது என்று தி.க.வின் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் வேந்தருமான கி.வீரமணி அவர்கள் சொன்னார்.
 ஊட்டி கோத்தகிரி சாலையில் உள்ள பேராரில் மெக்கன்ஸ் ஊட்டி ஆர்க்கிடெக் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு எட்டாம் ஆண்டு பட்டமளிக்கும் விழாவில் கலந்துக் கொள்ள கி.வீரமணி அவர்கள் வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளார்களை சந்தித்தார். 
  பேட்டியின் போது கல்லூரியின் தலைவர் என்.முரளிக்குமரன் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். 
 கி.வீரமணி அவர்கள் தெரிவித்ததாவது,
 அமைச்சர்கள் மீதான ரைடு என்பது ரொம்ப காலமாக இருந்துக்கிட்டு இருக்கு. அதுல ஒன்னும் சொல்வதற்கு இல்லை, இதுல பழி வாங்கறது என்று எப்படி சொல்ல முடியும். உண்மையை வெளியே கொண்டு வருவது தான் இதன் அர்த்தம் அவ்வளவுதான்.
 அதுக்கு பேர் பழி வாங்கறதுன்னு சொன்னால் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.   
 ஏன்னு கேட்டா, உங்களுக்கே தெரியும் உங்க ஊர்ல, இங்க தானே உலகமே எதிர்பார்க்குற கொடநாடு விஷயம் உள்ளது.


 அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது தனிநாடாகவே ஆகிவிட்டது. தமிழ்நாடு பற்றி பேசுறீங்க, கொடநாடு விஷயமும் பெரிய அளவில் இருக்கு. 
 அதனால, இது என்னன்னு விசாரிச்சா பழிவாங்கறாங்கன்னு எப்படி சொல்ல முடியும் அதனால தான், இது பழி வாங்குறது அல்ல, உண்மையை வெளியே கொண்டு வருவதே தவிர வேறு எதுவும் இல்லை.
 கீழடியில் எப்படி உண்மைகள் புதைந்திருக்கிறது!! கீழடியிலிருந்து நல்ல விஷயங்கள் வெளியில் வருது, கொட நாட்டில இருந்து வேறு விஷயங்கள் வெளியில வரப்போகுது. அதை செய்ய வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. 
 சட்டம் தன் கடமையை செய்யும் பொழுது அதுக்கு பேரு பழி வாங்குறது என்று பெயர் இல்லை. ஏன்னா கொள்ளைகாரர்களை திரும்ப பிடிக்குறாங்க, அதற்கு போய் போலிஸ்காரர்கள் பழிவாங்கிட்டார்ன்னு சொன்னங்கன்னா... சொல்லமுடியுமா? முடியாது. 
 மேலும் ஏற்கனவே இந்த ஆண்டு இல்லை, சென்ற ஆண்டு தமிழ்நாடு பற்றி அறிவித்த உடனே கூட திராவிடர் கழகம் சொன்ன கருத்து என்னெவென்றால், இதற்கு பெயர் தமிழ்நாடு தினம்,தமிழ்நாடு நாடு என்றால் என்னைக்கு தமிழ்நாடு நாடு என்று அறிவிக்கப்பட்டதோ அன்றைய தினத்தை தமிழ்நாடு நாடு என்று கொண்டாடுவது தான் உரிய முறையில் பொருத்தமாக இருக்கும். 
 காரணம் என்னவென்றால், அதற்கு முன்னால் வந்தது மாநிலங்கள் சீரமைப்பு உள்மொழி மாநிலங்கள், சென்னை ராஜ்ஜியம் என்று தான் முன்பு இருந்தது. அதிலிருந்து சில பகுதிகள் பிரிந்தன, சில பகுதிகள் இணைக்கப்பட்டன.
 ஆகவே முழுக்க முழுக்க அண்ணா அவர்கள், 1963-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் போது, தமிழ்நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்று மிகவும் அழகாக ஆணித்தரமாக வாதம் செய்தார். 
 அதற்கு முன்னாடி 1961-லேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் முதன்மையானவருமான காலஞ் சென்ற முபேஷ் குப்தா அவர்கள் சென்னை ராஜ்யம் பிரிந்த உடனேயே தமிழ்நாடு என்று அதற்கு பெயர் இல்லை சென்னை ராஜ்யமாக இருக்கிறது என்று சொன்னார்.
 அதற்கு முன்னாடியே 1956 லேயே தந்தை பெரியார் இது தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.