அகவிலைபடி அறிவிப்பில் திருப்தியாகாத அரசு ஊழியர்கள்? மக்கள் எங்கு போவார்களாம்?!!

அகவிலைபடி அறிவிப்பில் திருப்தியாகாத அரசு ஊழியர்கள்? மக்கள் எங்கு போவார்களாம்?!!

ம.பா.கெஜராஜ்,

 திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021 சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாததால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

 மாதத்துக்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் இருக்கின்றனர், அவர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசும்போது நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்த கருத்தும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல ஆகிவிட்டது.

  பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பலமுறை முறையிட்டும் அரசு ஒரு முடிவுக்கு வராததால், ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஜாக்டோ-ஜியோ மூலம் பென்சன் மீட்பு மாநாடு என்ற பேரில் பிரமாண்டமான போராட்டத்தில் இறங்கவும் முடிவு செய்திருந்தனர்.

 கேள்விப்பட்ட அரசு போராட்டம் எல்லாம் வேண்டாம், என்று முதல்வர் ஸ்டாலின் சமாதானப்படுத்தியதையடுத்து, தங்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஜாக்டோ-ஜியோ அண்மையில் அறிவித்திருந்தது. அரசு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையேயான பிரச்னை கொஞ்சம் ஓய்ந்து என்று எண்ணியிருந்த முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கலைக்கும் விதத்தில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 சுதந்திர தினத்தன்று இனிப்பான செய்தியாக இருக்கட்டுமே என்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  உயர்த்தி வழங்கிட முதல்வர் அறிவித்தார்.

  அதில் திருப்தியடையாதா அரசு அலுவலர்கள் டிஏ உயர்வு என்பது வழக்கமான அறிவிப்புதானே? அதனை ஏன் சுதந்திர தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு என்பது திசைத்திருப்பும் வேலை என்றும் அவர்கள் எகிறிகுதிக்கிறார்கள்.

   மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி உயர்வு என்பது 01.01.2022 முதல் வழங்கப்படுகிறது. ஆனால் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த 34% அகவிலைப்படி உயர்வு 01.07.2022 முதலே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதனால, மத்திய அரசு ஊழியர்களை விட அகவிலைப்படியில் ஆறு மாதம் பின்தங்கிய உயர்வாம்.

 கஜானாவையே சுரண்டி கொடுத்தால் கூட வாங்கி கொழுக்கும் அரசு ஊழியர்கள் அரசின் நிதிச்சுமையையும் கவனித்தில் கொள்ள வேண்டும் அல்லவா? ஏனென்றால் அரசு மக்களக்கானது. ஓ.கே.?