வேலூரில் தொடரும் சமூக சேவகர் மணிமாறன் சேவை!

கு.அசோக்,
தனது சொந்த பணத்தில் 3 ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த உண்மையான சமூக சேவகர் இதுவரையில் 1854 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 பெண் 2ஆண்கள் உடல்கள் ஆதரவற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒருமாதமாக இதே நில்யை தொடர்ந்தது.
உறவினர்கள் உரிமை கோராத நிலையில் இருந்த, ஆதரவற்ற உடல்களை காவல்துறையினர் அனுமதி பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன இறுதி சடங்கை சொந்த செலவில் செய்து 3 உடல்களையும் நல்லடக்கம் செய்தார்.
கொரோனாகாலத்திலும் அதனை பொருட்படுத்தாமல் ஆதவற்றோர்களின் உடல்களை அடக்கம் செய்த மணிமாறனின் சேவையை அனைவரும் பாராட்டினார்கள். இவர், இதுவரையில் இவர் 1854 ஆதவரற்றவர்களின் உடல்களை இறந்தவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களோ அந்த மத முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளார்.
செடி கொடி கொடுத்துட்டு பப்ளிசிட்டி தேடிக்கொள்வோர் மத்தியில் இப்படியும் ஒரு ஜீவன்.