சம்பளம் கேட்டு தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டம்! அல்வா கொடுத்த அதிகாரிகள்!!

சம்பளம் கேட்டு தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டம்! அல்வா கொடுத்த அதிகாரிகள்!!

 ஜி.கே.சேகரன்,

   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

  அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி தொகை மற்றும் போனஸ் தொகையை வழங்க கோரி கடந்த மூன்று நாட்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 இந்நிலையில் இன்று தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சம்பளத் தொகையை பெற்று தருவதாக உறுதி அளித்ததின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பணியாளர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

 மீண்டும் அல்வா கொடுத்துட்டாங்களா?