அரசியல் அனாதையானார் முன்னால் எம்.எல்.ஏ. சரவணன்!

அரசியல் அனாதையானார் முன்னால் எம்.எல்.ஏ. சரவணன்!

 ம.பா.கெஜராஜ்,

 அமைச்சர் பி.டி.ஆர். சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த டாக்டர் சரவணன் பதறிபோய் சமாதானம் பேசினார். அதற்காக, சம்பவம் நடந்த அன்று மாலையே பிடிஆர்- ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். இதனால் டாக்டர் சரவணன் திமுகவில் இணைய தூபம் போடுகிறார் என்று பேசப்பட்டது.

 ஆனால் அந்த கூற்றை திமுக பொய்யாக்கும் வகையில் அதைப்பற்றி இந்நாள்வரை வாயை திறக்கவில்லை.

 இதனால் சரவணன் அரசியலில் அனாதையானார் என்கிறார்கள்.

ளேனெனில் அவரை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ள மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பு நியாயமானதாக இருப்பதால் தலைமை மவுனம் காக்கிறது.  

  மதுரை மாவட்டம், நரிமேடு பகுதியில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனையை நடத்தி வருபவர் மருத்துவர் சரவணன். இவருக்கு திமுக வில் 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

 அவரும், அதிமுக வேட்பாளரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார். இந்த வெற்றிப் பரிசுடன் தலைமை இவருக்கு மாநில மருத்துவ அணியில் பொறுப்பு வழங்கி குஷிபடுத்தியது.

 இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட சரவணனுக்கு திமுக தலைமை வாய்ப்பு தரவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த சரவணன் 2021 மார்ச் 14-ஆம் தேதி பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டு அன்று மாலையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றார்.

 ஆனால் படுதோல்வியை தழுவினார். அதன் பின்னர், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கட்சியில் மாநில பொறுப்பு அல்லது தேசிய அளவில் வாரிய பொறுப்பு கிடைக்கும் என்று தீவிரமாக செயல்பட்ட சரவணனுக்கு அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை.

 இருந்த போதும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குட் புக்கில் இடம் பெற்றிருந்த சரவணனுக்கு கட்சியில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. மதுரையில் சூறாவளி போல் சுழன்று கட்சிக்கு ஆள் சேர்ப்பது. பாஜகவின் கொள்கைகளை பரப்புவது உள்ளிட்ட வேலைகளை தீவிரமாக செய்து வந்தார்.

 சரவணனின் இந்த செயல்பாடுகள் திமுகவினரை வெறுப்பேற்றியது. இதனால், ஏற்கனவே இவருடன் இஷ்டகாரர்களாக இருந்த உடன்பிறப்புகள் சிதறி ஓடினார்கள்.

 இந்த நிலையில் தான் கடந்த 13-ம் தேதி மதுரை விமான நிலையத்தின் வெளியே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் நடைபெற்றது.  

அமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரவணன், பாஜக மத அரசியல் செய்வதாகவும் அது தனக்கு சரிபட்டு வராது என்பதால் கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் கூறினார். அப்போது மீண்டும் திமுகவுக்கு திரும்ப வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்படி சென்றால் என்ன தவறு அது என் தாய் கட்சி 15 ஆண்டுகள் உழைத்துள்ளேன் என்று பதில் சொன்னார்.

  டாகடர் சரவணனின் இந்த திடீர் முடிவு பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்தது. அதன் எதிரொலியாக கட்சியின் விதிகளை மீறியதாக சரவணனை நீக்கி அறிக்கை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை.

  அவர்களால் கழற்றிவிட்ட சரவணனை திமுக சீண்டக்கூட இல்லை. ஆகவே அவர் அரவியல் அனாதையாக்கப்பட்டார் என்றே மதுரைக்கார அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். 

  இருந்த போதும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சரவணனை திமுகவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.