அதிகாரிகள் அச்ச உணர்வுடன் பணியாற்றுகிறார்களாம்! சொல்கிறார் பழனிச்சாமி!!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
அதிகாரிகள் ஒருவித அச்ச உணர்வுடன் பணியாற்றுகிறார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான பழனிச்சாமி கூறியிருப்பதாவது,,
திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமங்களை கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு, 20 கோடி ரூபாய் அபராதம் விதித்த, சப் - கலெக்டர்,லாரிகளை பறிமுதல் செய்த எஸ்.பி., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சந்தோஷ்குமாரிடம், அரசியல் கட்சி பிரமுகர்களும், அக்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களும், செய்யாத பணிகளுக்கு போலியாக 'பில்' தயாரிக்க அழுத்தம் கொடுத்து உள்ளனர்.
மன உளைச்சலில், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால், அனைத்து அதிகாரிகளும், ஒருவித அச்ச உணர்வுடன் பணிபுரிந்து வருகின்றனர். சந்தோஷ்குமார் மர்ம மரணத்தை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் மீது, உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளின் பணியிட மாறுதல் உத்தரவை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகள் அச்ச உணர்வின்றி, நேர்மையாக பணியாற்றியது போல, இப்போதும் அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும்.
அதற்கு, அதிகாரிகளை மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அய்யா அ.தி.மு.க.ஆட்சியில் அதிகாரி தற்கொலைக்கு காரணமான அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு சீட்டு கொடுத்து ஜெயிக்க வைத்தது தாங்கள்தானே அய்யா? என மக்கள் கேட்கிறார்கள்.