வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!

Ma.ba.gajaraj,

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திருப்பத்தூர் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 28, 29, 30 ஆகிய மூன்று தினம் ஆட்சியர் அலுவலகங்களை திறந்து வைத்ததோடு வேலூர் பஸ் நிலையத்தை திறந்து வைப்பது மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதற்காக அவர் மேற்படி மாவட்டங்களுக்கு வரவிருந்த நிலையில் காணொலிக் காட்சி மூலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சி எம் சி மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இன்னும் நான்கு தினங்களில் அப்பகுதிக்கு வர உள்ள நிலையில் முதல்வர் ஏன் இதை காணொளியில் திறந்துவத்தார் என்று கேள்வி எழுந்த நிலையில், சென்டிமென்ட் தான் அதற்கு காரணம் என்று வதந்திகள் பரவியது.

 இந்நிலையில் இன்று வேலூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ராணிப்பேட்டை சென்ற முதல்வர் அவர்கள் சக அமைச்சர்களுடன்  சி எம்சி மருத்துவமனைக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு விட்டு திரும்பினார்.

உடன் அமைச்சர்கள் ஏவ வேலு மற்றும் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் மருத்துவமனை நிர்வாகத்தினரும் இருந்தனர்.

முதல்வர் சிஎம்சிக்கு மருத்துவமனை வளாகத்துக்கு திடீரென வந்து சென்டிமென்ட் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.