மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது:- வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது:- வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஜி.கே.சேகரன்,

   மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு கோரியுள்ள அணைக்கட்டுவதற்கான தொழிற்நுட்ப அனுமதியை மத்திய அரசு அளிக்க கூடாது - தமிழக அரசு எங்களின் உரிமைகளுக்காக தான் குரல் கொடுக்கிறோம் மத்திய அரசுக்கு எதிரான குரல் அல்ல தமிழகத்திற்கு ஆதரவான குரலாக எடுத்துகொள்ள வேண்டும் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் பேச்சு

  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ53.13 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் 9.25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

 அவ்வாறுகட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  வேலூர்மாவட்டம்,வேலூரில் பாலாற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 53.13. கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்தது.

  இடையிடையே பணிகள் தொய்வுற்ற போதிலும் மாவட்ட ஆட்சியரின் தீவிர முயற்சியின் பேரில் பணிகள் நிறைவடைந்தது.

 அப்படியிருக்க இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக பேருந்துகளையும் இயக்கி வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி வேலுர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   மாலையில் வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

  மேலும், முடிவுற்ற திட்டங்களையும் துவக்கி வைத்தார்.

 இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன்,வேலு,காந்தி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத் ரட்சகன் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தாத திட்டங்களை கூட திராவிட மாடல் அரசு ஓராண்டில் நிகழ்த்தி காட்டி இந்தியாவுக்கு எடுத்துகாட்டாக இருக்கிறது.

  புதிய திட்டங்களாக அகரம் ஆற்றின் குறுக்கே தடுப்பனை பாலாற்றில் பொய்கை சேண்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பொன்னை ஆற்றின் குறுக்கே குகையநல்லூரில் ஒரு புதிய தடுப்பணையும் ரூ.58 கோடியில் கட்டபடும் தமிழ்நாட்டின் உரிமைகளை சென்னையில் பிரதமர் கலந்துகொண்ட விழாவிலேயே நேரடியாக நானே கேட்டேன்.

   எங்களின் பங்களிப்பை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் தமிழக அரசு எங்களது உரிமைகளை ஒன்றிய அரசிடம் கேட்கிறோம்.

  ஆனால் ஒன்றிய அரசுக்கு எதிரான  குரல் என்று சில சொல்கிறார்கள், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அடிக்கடி நிதி ஒதுக்குவது சட்டங்களை கொண்டு வருவது ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என தொடர்ந்து இவ்வாறு அவர்கள் செய்து வருகிறார்கள்.

 தமிழகம் காவிரி விவகாரத்தில் ஒரு போதும் உரிமைகளை விட்டுதராது போராடுவோம் வாதாடுவோம் அதனால் தான் நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அணை குறித்து விவாதிக்க கூடாது என நாங்கள் வலியுறுத்தினோம் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 அதனை நாங்கள் நம்புகிறோம் கர்நாடக அரசு அணிய கட்டுவதற்காக மத்திய தொழில்நுட்ப துறையிடம் அனுமதி கோரியுள்ளது மத்திய அரசு தொழில்நுட்ப உதவியை சுற்றுசூழல் அனுமதியையும் அளிக்க கூடாது என இக்கூட்டத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் பேசினார்.