வைத்தியலிங்கத்துக்கு இ.பி.எஸ் தரப்பு குறி! பதிலுக்கு நான்கு எம்.எல்.ஏக்களை தூக்கும் ஓ.பி.எஸ்.!

வைத்தியலிங்கத்துக்கு இ.பி.எஸ் தரப்பு குறி! பதிலுக்கு நான்கு எம்.எல்.ஏக்களை தூக்கும் ஓ.பி.எஸ்.!

ம.பா.கெஜராஜ்,

 அ.தி.மு.க. எனக்கா உனக்கா என்கிற போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதை அறிவோம்.

இந்நிலையில்லோ.பி.எஸ்-க்கு வலது கரமாக உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு இ.பி.எஸ் தரப்பு ஸ்கெட்ச் போட்டு பேச்சு வார்த்தை நடத்த முயன்றுள்ளதாம். மிஸ்டர் வைத்தி இ.பி.எஸ். பக்கம் வந்தால் துணைப்பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்படும் என்கிற ரூட்டை பிடித்துள்ளார்களாம்.

 இது ஒரு பக்கம் இருக்க கொங்கு மண்டலத்தில் பழனிசாமி, அவரின் ஆதரவு முன்னாள் அமைச்சர்களால் ஓரம் கட்டப்பட்ட, முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

  பன்னீர்செல்வம் என்ன தான் சட்ட போராட்டத்தை கையில் எடுத்திருந்தாலும், குறுக்கு சால் ஓட்டி எதிரணிக்கு பதிலடி கொடுக்க சற்று கீழிறங்கி வந்திருப்பதாக தகவல்.

 மேலும் கட்சியில் தன் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக, கொங்கு மண்டலத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். கொங்கு மண்டலத்தை பழனிசாமி, அவரின் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் தங்களின் கோட்டை என, கூறி வரும் நிலையில் அங்கு அவரது அஸ்திவாரத்தை அசைத்து பார்க்க திட்டமிட்டுள்ளாராம்.   

    குறிப்பாக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து, அ.தி.மு.க., தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாவட்டங்களில், ஆதரவாளர் பட்டியலை பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்தியலிங்கம், கோவை செல்வராஜ் ஆகியோர் தயாரித்து வருவதுடன், அவர்களிடம் ரகசிய பேச்சை துவக்கி விட்டனர்.

 ஏற்கனவே  2017ல் அ.தி.மு.க.,வில் இரண்டு அணிகளாக செயல்பட்ட போது, கொங்கு மண்டலத்தில் பன்னீர்செல்வம் பின் அணிவகுத்தவர்களை, தொடர்பு கொண்டு வருகின்றனர். அந்த கால கட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 24 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர். அதில், இரண்டு பேர் இறந்து விட்ட நிலையில், மீதமுள்ள 22 பேரில், 18 பேர் பழனிசாமி பக்கம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   இதில் நான்கு பேர் ஒதுங்கிக் கொண்டனர். தற்போது அவர்களை தனக்கு ஆதரவாக, சேலம் மாவட்டத்தில் களம் இறக்க பன்னீர்செல்வம் தயாராகி விட்டார். இதற்காக, வைத்தியலிங்கம் மூலம் பேச்சு நடத்தி வருகிறாராம்.

  ஓ.கே. ஓ.கே.