ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்துக்கு வரக்கூடாது என்ற தகவல் ஏதும் இல்லை!! !! எடப்பாடி மீது வழக்கா?

ம.பா.கெஜராஜ்,
எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்படும் என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். அதே நேரத்தில் ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்துக்கு வரக்கூடாது என்ற தகவல் வரவில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த வர் மீது வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்தாவது வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை உடைக்க பார்க்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
"ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அவரது அனுமதியின்றி எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றது தான் அத்துமீறல் என்பதால், அவர் மீது வழக்கு தொடரப்படும்
தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நாங்கள் அலுவலகத்திற்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தான் சொல்லி இருக்கிறதே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.
எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச் செயலாளர் என எந்த இடத்திலாவது சொல்லப்பட்டு இருக்கிறதா? அவராகவே அந்த பதவியை ஏற்படுத்தி பயன்படுத்தி கொள்கிறார்.
கட்சிப் பணியாற்றிட அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் செல்வார். நாங்களும் செல்வோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்தால் தான் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல பாதுகாப்பு தருவோம் என கூறப்படும் தகவல் பொய்யானது. எல்லோரையும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருவதை வைத்திலிங்கமும் சொல்கிறார்.
சசிகலா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராகி இருக்க முடியுமா? யார் துரோகி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமர வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து துரோகி என கூறுகிறார்.
நாட்டு மக்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறது. அவரை முதலமைச்சராக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாக தவிக்கவிடப்படுவார். " என்று சொன்னார்.
ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்துக்கு வரக்கூடாது என்ற தகவல் வரவில்லை!!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல விரும்பினால், நீதிமன்ற அனுமதியுடன் வர வேண்டும் என, காவல்துறை பதில் அளித்ததாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த தகவலும் வரவில்லை என, ஒ.பி.எஸ்.தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, சென்னை, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., - பிரபாகர், மனு அளித்தார்.
'பன்னீர்செல்வம் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல, நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால், உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம்' என, போலீஸ் தரப்பில், பன்னீர்செல்வம் தரப்புக்கு பதில் அளிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது.
இதுகுறித்து, போலீஸ் நிலையத்தில் மனு அளித்த, பிரபாகர் கூறுகையில், ''போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து, அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. பன்னீர்செல்வம் ஊரில் இருந்து வந்ததும், அனைவருடனும் கலந்தாலோசித்து தலைமை அலுவலகம் செல்லும் தேதியை அறிவிப்போம்,'' என்று சொல்லியிருக்கிறார்.