பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி பின்னடைவு:- சொல்கிறார் அமைச்சர் பொன்முடி!

ஜி.கே.சேகரன்
தமிழகத்தில் இருமொழிகொள்கை தான் கடைபிடிக்கபடும் ஹிந்தி நம் மீது திணிக்க கூடாது அதனை நாம் ஏற்கமாட்டோம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி பேச்சு - பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி பின்னடைவு இந்த தீர்ப்பு வருத்தமளிக்கிறது - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி பேட்டி
வேலூர்மாவட்டம்,முத்துரங்கம் அரசினர் கலைகல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தை அமைச்சர் பொன் முடி துவங்கி வைத்தார் இதன் பின்னர் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தலைமையில் நான் முதல்வன் திட்டத்தை அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்து பேசினார் இதில் மாணவ,மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் கடைபிடிக்கபடும் ஒன்றிய அரசு மூன்றாவதாக ஹிந்தி படித்தால் தேர்ச்சி என அறிவிக்கிறது ஆனால் ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒரு போதும் ஏற்காது தமிழ் வளர்ச்சியை நாங்கள் முழுமையாக கடைபிடிப்போம் மாணவ,மாணவிகள் இருமொழி கொள்கையில் உறுதியாக இருங்கள் பெண்கள் கல்வி கற்பதில் தமிழகம் முதன்மை வகிக்கிறது பெண்களுக்கு நாங்கள் சமவாய்ப்பளித்தோம் என்று பேசினார்.
பின்னர் அமைச்சர் பொன் முடி செய்தியாளர்களிடம் கூறுகையில் அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பானது தீர்ப்பு வந்துள்ளது ஒன்றிய அரசு அவர்கள் சொன்ன 27 சதவிகித இட ஒதுக்கீட்டை கூட செயல்படுத்தபடவில்லை சமூக நீதிக்காக தற்போது இந்தியா முழுவதும் குரல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகும்.
இது வேண்டாம் என இந்திய அளவில் குரல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது நாம் சமூக நீதிக்காக போராடினோம் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருந்ததக்கது என்று கூறினார்.
அரசினர் முத்துரங்கம் கலைக் கல்லூரியில் நடந்த விழாவில் ஆட்சியர் பெ குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்
முன்னதாக அவர் சொத்து குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் மனைவியுடன் ஆஜரானார்.