ஊதிய உயர்வு வேண்டுமாம்!

கு.அசோக்,
பம்ப் ஆப்ரேட்டர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மண்டல மாநாட்டில் நிறைவேற்றம்.ம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பாக சங்க தலைவர் வீராசாமி தலைமையில் மண்டல மாநாடு நடைபெற்றது.
பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தி தரவேண்டும்.முன்னுக்குப் பின் உள்ள ஊதிய முறையை மாற்றி தெளிவான நிலைப்பாட்டின் படி தூய்மை பணியாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி பொது நிதியில் இருந்து ஊதியம் வழங்குவதை மாற்றி பணியாளர் ஊதியம் கணக்கில் இருந்து ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மண்டல மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.