மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கில் பணம் செலுத்தவில்லை! இயக்குநர் நெல்சன் மனைவி மறுப்பு!

ம.பா.கெஜராஜ்,
மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கில் பணம் செலுத்தவில்லை என்று திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மறுப்பு தெரிவித்திருப்பதுடன், தவறான சங்கதிகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்திருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் ஓடிவிட்டார்.. மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், மேலும் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு நெல்சன் மனைவி மோனிஷா தொடர்ந்து அவருடன் போனில் பேசியதாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகியது.
மேலும், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா இது குறித்து ரொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் பணப்பரிவர்த்தை செய்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அது முற்றிலும் தவறான தகவல்.
அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை சிலர் பரப்புகின்றனர். வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் பணப்பரிவர்த்தனை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை"அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது எனக்கும், என் கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல். தவறான செய்தியை வெளியிட்டவர்கள் அதனை நீக்க வேண்டும். தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று எச்சரித்து அதில் தெரிவித்திருக்கிறார் மோனிஷா.