அதிமுக பதறுகிறது:- யார்? யார் உள்ளே செல்ல போகிறார்களோ?அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்!
வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக சேவை புரிந்து ஊராட்சிமன்ற தலைவர்கள் ஒன்றியதலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டர் பலர் கலந்துகொண்டனர் சிறந்த ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சான்றுகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
விழாவில் துரைமுருகன் பேசுகையில் மாவட்ட அளவில் இது போன்ற ஊராட்சித்தலைவர்களை ஊக்கப்படுத்த அவர்களின் சேவையை மேம்படுத்த விருதுகளை வழங்கி கௌரவித்தது பாராட்டத்தக்கது.
பஞ்சாயத்து தலைவர்களின் கையில் தான் ஆட்சியை நிலைநிறுத்துவதோ மாற்றுவதோ உள்ளது.
பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் மதுரையில் திமுக அமைச்சர் மீது காலணி வீசியது பண்பாடில்லாதது, அதிமுக ஆட்சியில் பல வங்கிகளில் கொள்ளையடிக்கப்பட்டது நாங்களும் அப்போதெல்லாம் சட்டமன்றத்தில் பேசிய போது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வளவு ஏன் ஜெயலலிதாவின் கொடநாட்டிலேயே கொலை நடந்தது அதை அவர் ஏன் கண்டுபிடிக்கவில்லை. தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து பேசும் போது மேகதாது அணை குறித்து கூட பேசலாம்.
நீதிமன்றம் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை எடுக்க சொல்கிறார்கள். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை எடுக்கிறோம் என்று சொல்கிறோம். ஆனால் நீதிமன்றத்தில் வீடுகட்டி கொடுக்க கூடாது என சொல்கிறார்கள்.
ஆனால் மக்கள் மத்தியில் சென்று நிற்கும் போது எங்களுக்கு தான் அவர்களின் கஷ்டம் தெரியும். போதை பொருள் தடுப்பிற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் போது அதிமுக பதறுகிறது அவர்கள் தான் இதில் மாட்டியவர்கள் யார்? யார் உள்ளே செல்ல போகிறார்கள் என்பது தெரியும் என்று கூறினார்.