எதிர்கட்சி முதல்வர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறதா?

எதிர்கட்சி முதல்வர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறதா?

ம.பா.கெஜராஜ்,

 எதிர்கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, வெளிநாட்டு முதலீட்டார்களை நேரில் சென்று அழைப்பது மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயல் நாட்டு பயணம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அனுமதியளிக்குமா என்று பலரும் எதிரிபார்க்கிறார்கள்.

  ஏன்னா? எதிர்கட்சி முதலமைச்சர்களின் அயல் நாட்டு பயணத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதியளிக்க மறுப்பதாகவும் அதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இது பற்றின விவரம் வருமாறு,

 மே 8 முதல் 1ஆம் தேதி வரை அபுதாபியில்  முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

  மேலும், கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான முஹம்மது ரியாஸ், மாநில தொழில்துறை அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களுக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 ஆகவே அபுதாபி செல்வதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு முறைப்படி கடிதம் அளித்தார்.

 அந்த அனுமதி கோரும் கடிதத்தை  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்த பின்னர், `கேரள முதலமைச்சர் கலந்துகொள்ளும் அளவுக்கு அந்த முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தடை இல்லை' எனக் கூறி பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்தது.

  உடனே கேரளா முதல்வர் அலுவலகத்தினர், பிரதமர் அலுவலகத்தை நாடினர், அப்போதும் கூட பினராயி விஜயனுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம்.

  இதனால் பாஜக அரசு எதிர்கட்சி முதலமைச்சர்களின் பயணத்துக்கு உள்நோக்கத்துடன் அனுமதியளிக்க மறுப்பதாக கூறுகின்றனர்.

 இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு தொழில் துறையின்கீழ், 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, முதலமைச்சர் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மே மாத இறுதியில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இந்த பயணத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற துறை அமைச்சர்கள் வெளிநாடு பயணத்துக்கு திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு பாஜக அரசு அனுமதியளிக்குமா அல்லது ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.