பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பியவருக்கு மீண்டும் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் பதவியா?

பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பியவருக்கு மீண்டும் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் பதவியா?

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 வேலூரில்,  பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பிய எஸ். ஐ.க்கு  மீண்டும் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் பதவியா என பல பெண்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள்.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் வேலூர் நகரில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டிருந்த சி.ராஜமாணிக்கம் என்பவரை அப்போதிருந்த எஸ்.பி. ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி காட்டினார்.

அவர் போக்குவரத்து பணிகளின் போது கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

 குறிப்பாக அவர் பெண் ஒருவருக்கு இரவு நேரத்தில் ஆபாசமாக மெஸேஜ் அனுப்பிவைத்து சிக்கிக்கொண்டார்.

இந்த மெஸேஜ் விவரம் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்ட பின்னரே அவர் மாறுதல் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீண்டும் வேலூர் போக்குவரத்து பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.

 அவர் பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பியது மற்றும் மையப்பகுதியில் பொதுமக்களிடம் சிக்கியது போன்ற பழைய தகவல்கள் யாவும் உயரதிகாரிகளிடம் மறைக்கப்பட்டு இந்த இடமாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் ஏற்கனவே அவரால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் இது குறித்து மீண்டும் புகார் அளிப்பதற்காக அவரது வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.