சரக்கு வித்து டாஸ்மாக்கை காப்பாறியவர்களுக்கு பாராட்டு சான்று!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
நல்லா சரக்கு வித்து, டாஸ்மாக்கை காப்பாறீனீங்க சார் என்று நால்வருக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.டி.பிரபுசங்கர் இ.ஆ.ப. அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த பாராட்டு சான்று கரூர் டாஸ்மாக் மேலாளர் சண்முகவடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அந்த பாராட்டு சான்றில் "டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் நற்சான்று வழங்கப்படுகிறது" என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இந்த வாசகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், சக நண்பர்களிடம் அந்த சான்றை காட்டியபின்னர் விஷயம் வாட்ஸாப்பில் பரவியது.
பலர் இதை மீம்ஸாக வெளியிட்டு நக்கல் நையாண்டி செய்தார்கள்.
இந்த விஷயம் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றது அதையடுத்து மேற்படி வாசகத்தை டாஸ்மாக் நிர்வாகத்தின் சிறந்த பணிக்கான என்று மாற்றி வழங்கினர்.