அவதி ஆனால் ஆனந்தம்!

அவதி ஆனால் ஆனந்தம்!

  கு.அசோக்,

 தேசிய நெடுஞ்சாலையில்   பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை ஓட்டி  சென்றனர்.

  வேலூர் மாவட்டம்,  வேலூரில் சென்னை - பெங்களூர்     தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

   வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி  சென்றனர்.

 மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த  மழை காரணமாக நேற்று இரவு லேசான மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொழிவுவானது நிலவியது. இதில் வள்ளிமலை,வேலூர்,காட்பாடி  என மாவட்டத்தின் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது இதனால் மக்கள் மிகுந்த அவதி கலந்த ஆனந்தமடைந்தனர்.