மாந்தோப்பை காலி செய்த யானைக் கூட்டம்! ஆம்பூர் அருகே அட்டகாசம்!!

மாந்தோப்பை காலி செய்த யானைக் கூட்டம்! ஆம்பூர் அருகே அட்டகாசம்!!

 கு.அசோக்,

 ஆம்பூர் அருகே தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் அறுவடையிற்கு தயாராக இருந்த மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானை கூட்டம். வனப்பகுதியிற்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த தமிழக - ஆந்திர எல்லை மலைப்பகுதியில் உள்ள பொன்னப்பல்லி கிராமத்தில் நேற்று இரவு யானைகூட்டம் படையெடுத்து வந்தது.

 குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த முள்வேலிகளை உடைத்தெறிந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னங்கன்று மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

  அதனை தொடர்ந்து யானைக்கூட்டம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பிற்கு சென்று அங்கு அறுவடையிற்கு தயாராக இருந்த மாம்பழங்களையும் மாமரத்தையும் உடைத்தெறிந்து நாசம் செய்தது.

 இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் வனத்துறையினர் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள மலைத்தொடர்களில் யானை கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

  மேலும் யானை கூட்டம் சேதப்படுத்திய மாமரம் மற்றும் தென்னை, வாழை ஆகிய பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்,யானை கூட்டம் மீண்டும் விவசாய நிலங்களுக்கு வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 எப்புடி நடவடிக்கை எடுப்பாங்க பாருங்க.