மாணவிகள் தாங்கள் பயின்றி கல்லூரியை மறக்க கூடாது:-எம்.எல்.ஏ.பேச்சு!

மாணவிகள் தாங்கள் பயின்றி கல்லூரியை மறக்க கூடாது:-எம்.எல்.ஏ.பேச்சு!

  ஜி.கே.சேகரன்,

எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது தமிழகத்தில் தான் - மாணவிகள் தாங்கள் பயின்றி கல்லூரியை எப்போது மறக்க கூடாது - வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி 50 ஆம் ஆண்டு விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேச்சு

 வேலூர் மாவட்டம்,வேலூர் சாய்நாதபுரத்தில் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 50 ஆம் ஆண்டு விழா கல்லூரியின் செயலாளர் மணிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் காத்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  இவ்விழாவில் இளங்கலை முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் உதவிதொகை ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை வழங்கி,பின்னர் விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசினார்.

  அவர் குறிப்பிடுகையில், தமிழக அரசு பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் வேறு மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது.

  தமிழக முதல்வர் தான் மகளிர் கல்வியில் முன்னேற்றம் அடைந்தாலும் தாய் தந்தையரை கவணிக்க வேண்டும் மேலும் எக்காரணம் கொண்டு தாங்கள் பயின்ற கல்லூரியை மறந்துவிட கூடாது மாணவர்கள் முன்னேற்றம் அனைவரின் முன்னேற்றமாகும் என்று பேசினார்.