அதிகாரிகளுக்கு வாரி வழங்கப்பட்ட சான்றிதழ்கள்!

கு.அசோக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்ப்பு கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் ஆண்டு விழா - கலெக்டர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரியின் மக்கள் ஆரோக்கிய திட்ட 2022 ஆண்டு விழா மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதியதாக விண்ணப்பித்த பயனளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறந்த மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழை தலைமை மருத்துவ அலுவலர் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்தும் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செந்தில்திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.