ஆம்பூரில் சப் கோர்ட் மாவட்ட நீதிபதி வசந்த லீலா அவர்கள் திறந்து வைத்தார்!

ஆம்பூரில் சப் கோர்ட் மாவட்ட நீதிபதி வசந்த லீலா அவர்கள் திறந்து வைத்தார்!

கு.அசோக்,

 ஆம்பூர் தொகுதி மக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையையேற்று ஆம்பூர் ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்ம், ஆம்பூர் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும்  வழக்கறிஞர்கள் தமிழக அரசிற்கு  கோரிக்கை வைத்திருந்தனர்.

   இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு, ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதி மன்றம் புதியதாக திறக்கப்பட்டது.

 இதனை வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிபதி வசந்த லீலா அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

  அதனைத் தொடர்ந்து சார்பு நீதிமன்றத்தில் முதல் வழக்கை நீதிபதி சாந்தி அவர்கள் விசாரணை செய்து துவக்கி வைத்தார்.

   இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  மேலும் இந்த சார்பு நீதிமன்றத்தில், தொழிலாளர் வழக்கு, நிலப்பிரச்சனை, விபத்து உள்ளிட்ட பல வழக்குகள் வாதாடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.