டிஐஜியின் நெஞ்சத்தை கவர்ந்த மாணவன் வரைந்த எலும்புக் கூடு ஓவியம்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் cwc மற்றும் நிர்வாக அதிகாரி (Administrative officer)அவர்கள் இருவருக்கும் வேலூர் சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பணி நிறைவு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த ADSP திரு. சேகர் ( cwc) மற்றும் நிர்வாக அதிகாரி (கிளி) திரு. ராஜீ, அவர்கள் இருவரும் 30.04.2023-ம் தேதி பணி ஓய்வு பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கான பணி நிறைவு விழா வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் இன்று 02.05.2023-ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் வேலூர் சரக டிஐஜி முனைவர் M.S. முத்துசாமி, இ. கா. ப.,அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.s ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் தலைமை தாங்கினார்கள். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ADSP,DSP, Inspector, அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னதாக போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும் மாணவன் லோகேஷ் ஒரு மது பாட்டிலுக்குள் மனிதனாகச் சென்று எலும்பு கூடாக வெளிவரும் மனிதன் ஓவியத்தை மிக எளிமையாகவும் தத்துரூபமாகவும் வரைந்திருந்தார்.
அவ்ஓவியம் வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப., அவர்களின் நெஞ்சம் கவர்ந்தது. அவர் மாணவன் லோகேஷை நேரில் சென்று பாராட்டினார்.
அதேபோல் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையம் மற்றும் APJ TRUST இணைந்து நடத்தும் போதைக்கு எதிரான விழிப்புணர்வுக்காக காவல்துறை - பொதுமக்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வி. கிரண்ஸ்ருதி இராணிப்பேட்டை தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாகம், வேலூர் சரக டிஜஜி முனைவர் எம்.எஸ். முத்துசாமி இ.கா.ப., மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி ச.வளர்மதி இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெ.விசுவேசுவரய்யா,வி.பிரபு
காவல்துறை துணை கண்காணிப்பாளர், விநாயகமூர்த்தி ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது ஆற்காடு நகர ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்குதல் ஆற்காடு நகர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல், முன்னிட்டு ஆற்காடு நகர மருத்துவமனை பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல், ஆற்காடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சார்பாக போதைக்கு எதிரான விழிப்புனர்வு தொடர்பான ஓவிய போட்டிகள் ஆகியவை நடைபெற்றது.