லஞ்ச ஒழிப்பு பிரிவின் அவுட்புட்டுகளை பலதரப்பினர் எதிர்பார்க்கின்றனர்!

Ma.ba.Gajaraj,
தமிழ்நாடு காவல்துறையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறைக்கு அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மத்தியில் எழுந்த நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அவர் பிறப்பித்த அந்த உத்தரவில் சிபிசிஐடி பிரிவு டிஜிபியாக இருந்த அபய் குமார் சிங், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அப்படியிருக்க அவரின் பல அவுட்புட்டுகளை பலதரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
ஏன்னா? ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றதும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை அலறவைத்தார். வழக்குகள் பாய்ந்தது, ஆனால் நடவடிக்கைகள் ஒன்றும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
இந்நிலையில், கந்தசாமி ஐ.பி.எஸ்ஸிக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கும் அபய் குமார் சிங் ஐபிஎஸ் பலதரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? என்கிற கேள்வி எழுகிறது.
லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அபய் குமார் சிங் ஐபிஎஸ் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.
1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். தென் மண்டல ஐஜி, சென்னை மாநகரின் கூடுதல் காவல் ஆணையர், திருநெல்வேலி மாநகரின் காவல் ஆணையர், ராமநாதபுரத்தில் துணை ஐஜி, மதுரை எஸ்.பி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.
அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றதை அடுத்து, அவரது பதவிக்கு புதிதாக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியாற்றி வந்தார். இதையடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
சிபிசிஐடி இயக்குநர் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் நபரே நியமிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்படியிருக்க ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த அபய் குமார் சிங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஏடிஜிபி அந்தஸ்திற்காக அந்த பதவி பணியிறக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டிஜிபி அந்தஸ்திற்கு அபய் குமார் சிங் பதவி உயர்வு பெற்றார்.
இந்த சூழலில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இனி இவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
குறிப்பு:- இந்த துறையானது நெருப்பு மீது நடப்பதற்கு சமமாகும். ஆட்சியாளர்கள் கண் அசைத்தால் தூசுகள் தட்டப்பட வேண்டும் என்பதால் அதை இவர் சவாலாக எண்ணாமல் திறம்பட கையாலுவார் என்றே பார்க்கப்படுகிறது.
அபய் குமார் சிங் ஐபிஎஸ் |
கூடுதல் டிஜிபி, கிரைம் பிரிவு சிஐடி, சென்னை |
கூடுதல் டிஜிபி, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு, சென்னை |
ஜி.வெங்கட்ராமன் ஐபிஎஸ் |
கூடுதல் டிஜிபி, தலைமை அலுவலகம், சென்னை மற்றும் ஏடிஜிபி, நிர்வாகம், சென்னை (கூடுதல் பொறுப்பு) |
கூடுதல் டிஜிபி, கிரைம் பிரிவு சிஐடி, சென்னை |
பி.பால நாக தேவி ஐபிஎஸ் |
கூடுதல் டிஜிபி, செயல்பாடு, சென்னை |
கூடுதல் டிஜிபி, நிர்வாகம், சென்னை மற்றும் கூடுதல் டிஜிபி, தலைமை அலுவலகம், சென்னை (முழு பொறுப்பு) |
ஹெச்.எம்.ஜெயராமன் ஐபிஎஸ் |
கூடுதல் டிஜிபி, ஆயுதப்படை, சென்னை |
கூடுதல் டிஜிபி, செயல்பாடுகள், சென்னை (முழு பொறுப்பு) |