கூடுதலாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையா?

ஜி.சாந்தகுமார்,
தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் அதில் ஒரு கோடி அட்டைதாரர் பெண்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டு பயணாளிகள் தேர்வு செய்த போது தகுதிப் பட்டியலுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இடம் பிடித்தனர்.
1கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனாளர்களாக சேர்க்கப்பட்டு செப்டம்பர் 15, 2023 முதல் அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அப்படியிருக்க தகுதியுள்ள பெண்கள் கூட நீக்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததால், மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இருந்தும் கூட தகுதியுள்ள பல பெண்கள் இன்னும் இணைக்கப்படவில்லை.
இதை மையப்படுத்தி மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த தலைவர்களை பல இடங்களில் மக்கள் முற்றுகையிட்டு கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று திட்ட அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து வந்துள்ளது.
அதன்படி கூடுதலாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
புதிய பயனாளர்கள் இணைக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் மே மாத இறுதியில் அச்சடிக்க்கபடும், பின்னர்
ஜூன் இரண்டாவது வாரம் முதல் வழங்கப்படும் என்றும், ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சொல்கிறார்கள்.
இதுலேயேயும் ஒரு பிரச்சனை உள்ளது. அதாவது புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ள நிலையில் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய புதிய ரேஷன் அட்டைகளைன் உடனே வழங்க கோருகிறார்கள்.