உயிர் பலிக்கு காரணமான மருத்துவர்களின் ஸ்ட்ரைக்!

உயிர் பலிக்கு காரணமான மருத்துவர்களின் ஸ்ட்ரைக்!

ம.பா.கெஜராஜ்,

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக விக்னேஷ் என்பவர் பரிதாபமாக இறந்தார் 

நேற்று முன்தினம் கிண்டி கலைஞர் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவத்தை தொடர்ந்து நேற்று தமிழக முழுவதும் உள்ள 45 ஆயிரம் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

இந்நிலையில் நேற்று இதே கலைஞர் மருத்துவமனையில் விக்னேஷ் என்கின்ற 31 வயது வாலிபர் வயிற்றுப் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் மருத்துவர்கள் விக்னேஷுக்கு  சிகிச்சை பார்க்காததால் அவர் பரிதாபமாக இருந்தார். அதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் இன்று கலைஞர் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து வருகிறார்கள். 

ஸ்ட்ரைக் செய்வதற்கு காட்டிய அக்கரையை வைத்தியத்திற்கு காட்டாமல் போன மருத்துவர்கள் மெத்தனத்தால் ஒரு உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது