பொறுமை இழந்த ரயில் பயணிகள்!

பொறுமை இழந்த ரயில் பயணிகள்!

கு.அசோக்,

 திருச்சியிலிருந்து வேலூர் வழியே திருப்பதி செல்லும் ரயில் மின் ஒயர் ரயில்வே கேட் அருகே அறுந்ததால் ஒன்றரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது பயணிகள் பாதிப்பு ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதம் ரயில்வே துறையினர் மின் ஒயரை சரி செய்த பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

 வேலூர்மாவட்டம், வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே திருச்சியிலிருந்து திருப்பதி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

 அப்போது பெங்களூர் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை மூடிய போது ரயில்வே கேட் இரும்பு கம்பி உடைந்து மின் ஒயரின் மீது விழுந்து ஒயர் அறுந்தது.

   இதனால் ரயில் டவுன் ரயில்வே நிலையம் அருகிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. உடனடியாக ரயில்வேதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 இருந்த போதும் சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்தே ரயில்வே குழு அங்கு வந்தனர்.

 பழுது நீக்கும் ரயில் பெட்டியுடன் 25-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இணைந்து மின்சார ஒயரை சரி செய்தனர்.

¢ இந்த நிலையில் ரயில் பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது பின்னர் மின் ஒயர் சரி செய்யப்பட்டதால் எஸ்க்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.