வெண்டைக்காய் பறிக்க வந்த இளம் பெண்ணிடம் பாஜக நிர்வாகி சில்மிஷம்! தேடுது போலீஸ்!

த.நெல்சன்,
வெண்டைக்காய் பறிக்க வந்த இளம் பெண்ணை சில்மிஷம் செய்த பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவர் பா.ஜ.க நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவராக உள்ளார்.
அப்படியிருக்க அவருக்கு சொந்தமான தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு அதைப் பறித்து சந்தைக்கு அனுப்புவார். காய்கறிகளை பறிக்க அதே பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் தினசரி கூலி அடிப்படையில் அவரது தோட்டத்திற்கு வேலைக்குச் செல்வார்கள்.
அவரது தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காய்களை பறிக்க அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை வேலைக்கு அழைத்துள்ளார். இதன் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்கிற இளம் பெண்சமீபத்தில் செல்வகுமாரின் காய்கறி தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கச் சென்றார்.
அப்போது சரஸ்வதி வெண்டைக்காய் பறிப்பதை பார்த்த செல்வகுமார் அவரை அழைத்துள்ளார்.
பின்னர் சரஸ்வதியிடம் செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து அவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் ராதாபுரம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யச் சென்றனர். ஆனால் செல்வகுமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.
தற்போது அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்களாம்.